நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்களில் கறுப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாலை 5 மணிக்குப் பின் கள்ள ஓட்டுகள் அதிகளவு பதிவாரியாவதாகவும், இதனால் தேர்தலை ரத்து செய்யக்கோரியும் கண்களில் கறுப்புத்துணியைக் கட்டியபடி முழக்கங்களை எழுப்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் பதிவான வாக்கு விவரங்களையும், சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இதே போல் , நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியினரால் முறைகேடு நிகழ்த்தப்பட்டுள்ளதால், மறு தேர்தல் நடத்தக் கோரி, எஸ்.டி.பி.ஐ கட்சியும் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் மனுவை அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி ராஜா, தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் அதிகளவு இருந்ததாகக் கூறினார். சென்னையில் 56வது வார்டில் ஆளும் கட்சியினர் தேர்தல் அலுவலர்களையும்,காவல்துறையினரையும் மிரட்டி கள்ள ஓட்டுகள் போட்டதாகவும், சிசிடிவி கேமராக்கள் முழுமையாக அணைக்கப்பட்டிருந்ததாகக் குற்றம்சாட்டினார். கள்ள ஓட்டுப் போட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய அவர், குற்றத்தைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறையினர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார். கள்ள ஓட்டுப் போடப்பட்ட வாக்குச்சாவடியின் சிசிடிவி யை ஆய்வு செய்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தி மறு தேர்தல் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.