சங்க கால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினை கண்டறிய கடல்சார் முன் கள ஆய்வுப் பணியை தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்துள்ளார்.
தமிழக தொல்லியல் துறை சார்பில் 2022ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஏழு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் கடல்சார் சங்க கால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினை கண்டறிய கடல் சார் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய கடலாய்வு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடலாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழக அரசு தொல்லியல் துறை 1968 ஆம் ஆண்டு கொற்கையில் அகழாய்வு
மேற்கொண்டுள்ளது. முதல் அகழாய்வில் கொற்கையின் காலம் பொ.ஆ.மு 785 என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. பாண்டியர் காலத்தில் கொற்கை மிகச் சிறந்த துறைமுகமாக செயல்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கொற்கையில் அகழாய்வு நடைபெற்றுள்ளது. 2 அகழாய்வின்படி கிமு 8ம் நூற்றாண்டிற்கு முன்னரே கொற்கை மிக முக்கிய துறைமுகமாக செயல்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
இவ்வாய்வில் கொற்கை துறைமுகத்தின் தொன்மையைக் கண்டறிய Multibeam Echo sounding, Sidescan Sonar and Subbottom Profiler போன்ற அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
-ம.பவித்ரா