29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொற்கை துறைமுகத்தில் தொல்லியல் ஆய்வு – அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கிவைத்தார்

சங்க கால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினை கண்டறிய கடல்சார் முன் கள ஆய்வுப் பணியை தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்துள்ளார்.

தமிழக தொல்லியல் துறை சார்பில் 2022ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஏழு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் கடல்சார் சங்க கால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினை கண்டறிய கடல் சார் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய கடலாய்வு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடலாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழக அரசு தொல்லியல் துறை 1968 ஆம் ஆண்டு கொற்கையில் அகழாய்வு
மேற்கொண்டுள்ளது. முதல் அகழாய்வில் கொற்கையின் காலம் பொ.ஆ.மு 785 என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. பாண்டியர் காலத்தில் கொற்கை மிகச் சிறந்த துறைமுகமாக செயல்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கொற்கையில் அகழாய்வு நடைபெற்றுள்ளது. 2 அகழாய்வின்படி கிமு 8ம் நூற்றாண்டிற்கு முன்னரே கொற்கை மிக முக்கிய துறைமுகமாக செயல்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாய்வில் கொற்கை துறைமுகத்தின் தொன்மையைக் கண்டறிய Multibeam Echo sounding, Sidescan Sonar and Subbottom Profiler போன்ற அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading