டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி கலால் கொள்கை வழக்கில் அந்த மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது சிபிஐ காவல் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணீஷ் சிசோடியா, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு இன்று காலை திஹார் சிறைக்கு சென்றுள்ளது. அங்கு சிசோடியாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மணீஷ் சிசோடியாவுக்காக சிம் கார்டு, போன் வாங்கியதாகக் அவரின் தனிச் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.








