திண்டுக்கல்லை அடுத்த ஆத்தூர் மாணிக்கவாசகர் திருக்கோயில் மற்றும் காவல்தெய்வம் கருப்பணசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் திருக்கோயில் மற்றும் காவல்தெய்வம் கருப்பணசாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா திருக்கோயில் பங்காளிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பெரியவர்கள் மற்றும் நிலக்கோட்டை பேரூராட்சித் துணைத்தலைவர் எஸ்பி முருகேசன் சிறப்பு விருத்தினராக பங்கேற்க நடைபெற்றது.
முன்னதாக காலை ஸ்ரீவிநாயகர் வழிபாடு , மஹா கணபதி ஹோமம் , மகா சுதர்சன ஹோமம் , ஸ்ரீமகாலெட்சுமி ஹோமம் , நவக்கிரக ஹோமம் , வாஸ்த்து சாந்தி மற்றும் அங்குரார்பணம் நடைபெற்றது. மாலை புண்ணிய நதிகளில் எடுத்துவரப்பட்ட புனிதநீர் கலசங்கள் கொண்டுவரப்பட்டு, முளைப்பாரிகளுடன் கிராம தெய்வங்களை வழிபட்டு, மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
மாணிக்கவாசகர் , காவல் தெய்வம் கருப்பணசுவாமிக்குத் திருக்குடத்துக்குள் எழுந்தருளச் செய்து, யாகசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் கலசங்களுக்குச் சிறப்பலங்காரம் செய்து முதற்கால யாக வேல்விகள் துவங்கப்பட்டு , வேதபாராயணம் , திருவாசகம் பாராபயணம் , 108 ஹோமசாமான்களுடன் வேதமந்திரங்களுடன், திருவாசகமந்திரங்களுடன் ஹோமம், பூர்ணாகுதி மகாதீபாராதனை நடைபெற்றது.
காலை இரண்டாம் கால யாக வேள்வி துவங்கப்பட்டு திருவாசபாராபயணம் , நாடி சந்தானம் ஸ்பரிசாகுதி 108 ஹோம மஹா தீபாராதனை, யாத்ரா தானம் மற்றும் புனிதரீர் கடம் புறப்ட்டு , கோயிலை சுற்றி வந்து கோயிலின் விமானத்தில் ஏற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடை பெற்றது. கலசத்தில் புனிதநீர் ஊற்றி தீபாராதனை செய்த சில நொடிகளில் கருட பகவான் வானில் வட்டமிட்டதைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்து தரிசித்தனர். பின்னர் கோயில் விமானத்திலிருந்து பக்தர்களின் மீது புனித நீர் தீர்தவாரி இறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அருசுவை சைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது .
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.