முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு எங்கெங்கு மழை?

மாண்டஸ் புயல் கரையை கடந்து தரைப்பகுதியில் நகர்ந்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெங்கு மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. 

அதிகாலை சுமார் 4 மணி நிலவரப்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை ஆனது காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

லேசானது முதல் மிதமான மழையானது சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர் ,கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி ,தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பூந்தமல்லி, புழல், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

G SaravanaKumar

ஸ்மார்ட் சிட்டி பணிகளை அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு

Gayathri Venkatesan

டிடிவி தினகரனுக்கு எதிரான மோசடி வழக்கு: அமலாக்கத்துறைக்கு புதிய உத்தரவு

Web Editor