நீங்கள் எங்கு சென்றாலும் உடனடியாகக் கிடைக்கும் உணவுகளில் ஆம்லெட் முக்கியமான ஒன்று. பொதுவாக நாம் வெறும் ஆம்லெட்டோ, ஆப் பாயிலோ அல்லது மசாலா, காய்கறிகள் அல்லது சீஸ் போன்றவற்றுடன் ஆம்லெட் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் தெருவோர வியாபாரி ஒருவர், சௌமைனுடன் ஆம்லெட் கலவையை தயார் செய்து சாப்பிட்ட வீடியோ வைரல் ஆனாலும்… அதை பார்த்த பலருக்கும் எரிச்சலூட்டியுள்ளது.
பொதுவாக இரு வெவ்வேறு ரெசிபிகளை இணைத்து புதிய உணவை உருவாக்குவது இப்போதெல்லாம் ட்ரெண்ட் ஆகிவிட்டது. அப்படி செய்யும்போது அந்த உணவின் சிறப்பு தன்மையை சிதைக்காமல், தனித்துவமான மற்றும் சுவையான ஒன்றைச் செய்வதில் சிலர் வெற்றி பெற்றாலும், மற்றவர்கள் நேர் எதிராக இரண்டின் தனித்தன்மையையும் அழித்து உண்ணமுடியாத படி பரிமாறுகிறார்கள். அதற்கு உதாரணமாக ஃபேன்டா மேகி, சாக்லேட் ஆம்லெட், மட்கா தோசை போன்றவைகளை சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது, டெல்லியில் உள்ள சாந்தினி சௌக்கை சேர்ந்த தெருவோர வியாபாரி ஒருவர் சௌமைன் ஆம்லெட்’ என்கிற வித்யாசமான ரெசிபியை தயாரித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்ஸ்டாகிராமில் ரஜத் உபாத்யாய் என்கிற Food Blogger பகிர்ந்துள்ள வீடியோவில், அந்த தெருவோர வியாபாரி துவக்கத்தில் முட்டைகளை ஒரு கிண்ணத்தில் உடைத்து, அதில் மசாலா மற்றும் சில காய்கறிகளை சேர்க்கிறார். பின்னர், அவர் அந்த கலவையை ஒரு
பாத்திரத்தில் ஊற்றி பாதி வெந்ததும், அதில் சௌமைன், தக்காளி மற்றும் இன்னும் சில மசாலாவைச் சேர்க்கிறார். இறுதியாக, அவர் உணவு தயாரானவுடன் கொத்தமல்லி மற்றும் இன்னும் சில மசாலாவுடன் அந்த ரெசிபியை அலங்கரிக்கிறார்.
இந்த வீடியோ மார்ச் 2 அன்று ரஜத் உபாத்யாயின் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவின் தலைப்பு, “சிகந்தர் பாய் கி ஆம்லெட் வாலி சௌமீன்” என எழுதப்பட்டிருந்ததோடு, தற்போது வரை கிட்டத்தட்ட 30.2kக்கும் அதிகமான பார்வைகளையும், 1,200க்கும் அதிகமான
லைக்குகளையும் பெற்று வைரலாகியுள்ளது. இருப்பினும், செய்முறை வினோதமாக இருந்ததால் பலர் இந்த வீடியோவை விரும்பவில்லை. இதனால் இந்த விடியோவிற்கு அதிகப்படியான மோசமான கமெண்ட்களே தற்போது வரை பதிவாகியுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா