முக்கியச் செய்திகள் இந்தியா

ஹரியானா மாநிலத்தில் பார்கள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி!

ஹரியானா மாநிலத்தில் கடைகளுடன் மதுக்கூடங்களையும் திறக்க ஹரியானா அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஹரியானாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதுவரை 7.62 லட்சம் பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். 7.43 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சில தளர்வுகளை ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹரியானா மாநிலத்தில் கடைகளை காலை 9 முதல் மாலை 6 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களும், பார்களும் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை 50 சதவிகிதம் நபர்களுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு டெலிவரிகளும் இரவு 10 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.
வழிபாட்டுத் தலங்களில் 21 நபர்கள் ஒரே நேரத்தில் வழிபாடு செய்யலாம் / அதுபோல் திருமணம் மற்றும் இறுதி சடங்களில் 21 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. திருமண ஊர்வலத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தாலும் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

SBI வாடிக்கையாளர்களுக்கு இறுதி வாய்ப்பு

G SaravanaKumar

பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதா? பா. ரஞ்சித் கண்டனம்

Web Editor

Google Maps-ன் அசத்தலான புதிய சேவை; என்ன தெரியுமா?

Arivazhagan Chinnasamy