விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் சுசீந்திரன், இயக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மும்பையில் பிரம்மாண்ட செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் “வள்ளி மயில்” படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி, சிறுமலை காட்டினுள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோவில் அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது. நாடக கலையின் பின்னணியை வைத்து ஒரு புதுமையாக இத்திரைப்படம் உருவாகிறது.
1980 கால கட்ட கதை என்பதால், முன்னதாக திண்டுக்கல் மாநகரில் அந்தக்கால பின்னணியை கண்முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. மும்பையை சேர்ந்த 50 ஸ்டண்ட் மாஸ்டர்களால் இந்த சண்டைக்காட்சி உருவாக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







