மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆடி மாத பெருக்கை முன்னிட்டு தென்மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வந்திருந்து தாய்மாமன்களுக்கு பாதபூஜை செய்து அவர்களிடம் ஆசி வாங்கி தாய்மாமன் தினமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழ் கலாசரத்தில் எத்தனையோ உறவுமுறைகள் இருந்தாலும் தாய்மாமன் உறவுக்கு எப்போதுமே தனிச்சிறப்பு உண்டு. தன்னுடைய சகோதரிகளின் திருமணத்தில் தொடங்கும் தாய்மாமன் பந்தம் அவர்களுடைய குழந்தை பிறக்கும்போதே முதல் உணவாக சீனிப்பால் கொடுப்பது தாய்மாமன் தான்.
அந்த குழந்தையின் காதணி விழா,பூப்புனித நீராட்டு விழா,நிச்சயதார்த்தம்,திருமணம் என எல்லாவற்றிலும் முன்னின்று முதல் ஆளாய் வருவது தாய்மாமன் தான்.அந்த குழந்தையின் இறப்பிலும் இறுதியாக தாய்மாமன் கொடியாக ஒரு செம்பு நீரை தெழித்த பின்னரே இறுதி அடக்கம் நடைபெறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தான் வாழும் வரையில் தனது மருமகன்,மருமகளுக்காக தான் சேமித்த மொத்த பணத்தையும் சீதனமாக அளிப்பது தன்னிகரற்ற தாய்மாமன் தான்.குறிப்பாக தாய்க்கு எத்தனை முக்கியத்துவம் இருக்கிறதோ அத்தனை முக்கியத்துவம் தாய்மாமனுக்கு உண்டு.
இத்தகைய சிறப்புகளை தன்னகத்தே உடைய தாய்மாமனை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடியில் வரும் 18ம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு தாய்மாமனுக்கு தக்க மரியாதை அளித்து தங்களை இறுதிவரை அரணாக காக்க வேல்கம்பு ஒன்றை பரிசாக அளித்து வணங்கி செல்கின்றனர். இந்த திருவிழா மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள வாலந்தூர் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி அம்மன் கோயிலில் கோயிலின் முன்பாக வெகு சிறப்பாக நடைபெற்றது.
இத்திருவிழாவில் பங்கேற்பதெற்கென மதுரை மட்டுமின்றி தேனி,திண்டுக்கல், விருதுநகர் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர்.முன்னதாக தங்களது தாய்மாமன்களை காசிபுலி மந்தையில் இருந்து சகல மரியாதைகளுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.மருமகன்கள் தங்கள் தாய்மாமன்களுக்கு மரியாதை செய்தது காண்போரை நெகிழச் செய்தது.
வேந்தன்