முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை மக்களுக்கு மதிய உணவு – விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாடு

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வரும் 28ம் தேதி உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று “உலக பட்டினி தினம்” அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் “தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்” திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி 28-ம் தேதி காலை 11 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றிய பகுதிகளில் ஏழை மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023 தொடரில் “Slow over rate” விதியால் அபராதம் செலுத்திய கேப்டன்கள்! RCB-க்கு இதிலும் சோதனையா?

தொடர்ந்து, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சமூக நீதி பற்றி திமுகவிற்கு பாடம் எடுக்க வேண்டாம்-அதிமுகவிற்கு டி.ஆர்.பாலு கண்டனம்

Web Editor

“குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப்பாடுகிறாய்”

Web Editor

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது தளபதி 67 படத்தின் டைட்டில்; ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

Yuthi