33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

உள்ளாட்சி இடைத்தேர்தல்; அதிமுக புறக்கணிப்பு?

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் மாநகராட்சி, நகராட்சி மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் யாரும் போட்டியிடவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. 

அதிமுக உட்கட்சி பூசல்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. கடந்த 23ந்தேதி நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தின் போது பெரும்பாலானா எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்தனர். இதையடுத்து பொதுக்குழுவை பாதியிலேயே புறக்கணித்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர். ஓபிஎஸ், இபிஸ்க்கு இடையே நிலவும் உட்கட்சி சண்டை காரணமாக கட்சி பிளவு படும் சூழ்நிலை உருவாகியுள்ளதோடு சின்னமும், கொடியும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய 27ஆம் தேதி கடைசிநாள் ஆகும். இதன்படி இன்று மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசிநாளாகும். மொத்தம் தேர்தல் நடைபெற உள்ள 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் சின்னத்தை ஒதுக்க உள்ளது.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும். இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட வேண்டும். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் இந்த படிவங்களில் கையெழுத்து போட்டு வந்தனர்.

தேர்தல் புறக்கணிப்பு

அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம் பெற உதவியாக இருக்கும் ஏ மற்றும் பி படிவங்கள் வழங்கப்படவில்லை. இதனால் சுயேட்சை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற சூழல் எழுந்ததால் பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டியிடாமல் தேர்தலை புறக்கணித்துள்ளது.

காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாநகராட்சிகள், தேனி, மயிலாடுதுறை நகராட்சிகள், புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் ஒன்றில் கூட அதிமுக போட்டியிடவில்லை. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தவுடன் சின்னம் ஒதுக்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading