17 கட்சிகள் இணைந்து பொதுத்தேர்தலை சந்திப்போம்! – பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்!

17 கட்சிகள் இணைந்து 2024 பொதுத்தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.  2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. மக்களவை தேர்தலில் பாஜக-வை வீழ்த்த முக்கிய…

17 கட்சிகள் இணைந்து 2024 பொதுத்தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். 

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. மக்களவை தேர்தலில் பாஜக-வை வீழ்த்த முக்கிய ஆலோசனை நடத்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டினார். பாட்னாவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, முதலமைச்சர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், 17 கட்சிகள் இணைந்து 2024 பொதுத்தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். அதோடு இன்றைய கூட்டம் நல்லதொரு கூட்டமாக இருந்தது; கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தனர். விரைவில் நடக்க உள்ள அடுத்த கட்ட கூட்டத்தை காங்கிரஸ் கட்சி தலைமையேற்று நடத்த உள்ளது உளிட்ட தகவல்களை நிதீஷ்குமார் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.