புஷ்பா இரண்டாம் பாகத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

புஷ்பா இரண்டாம் பாகத்தின் படபிடிப்பு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜீன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை…

புஷ்பா இரண்டாம் பாகத்தின் படபிடிப்பு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜீன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கிய இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் இந்தியில் அதிக வசூலை ஈட்டியது. இந்தியில் மட்டும் ரூ,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புஷ்பா இரண்டாம் பாகத்தின் படபிடிப்பு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புஷ்பா முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த அல்லு அர்ஜீனுக்கு இரண்டாம் பாகத்தில் நடிக்க இரண்டு மடங்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல இயக்குனர் சுகுமாருக்கு இரண்டு மடங்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் புஷ்பா இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படகுழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.