36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

அஜய் மிஸ்ராவை பிரதமர் பதவி நீக்கம் செய்யாதது ஏன்? ராகுல் காந்தி

லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய கோரி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் பேரணியாக சென்றனர்.

லக்கிம்பூர் பேரணியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் தொடர்புடைய மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், இன்றைய கூட்டத்தின்போது மத்திய அமைச்சரரை பதவி நீக்கம் செய்ய கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை எதிர்கட்சி உறுப்பினர்கள் பேரணி சென்றனர். திமுக உள்ளிட்ட
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்டதை விபத்து என்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறுவதாக குற்றம்சாட்டினார். இன்று அல்லது நாளை அவர் சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும் ராகுல்காந்தி கூறினார். அஜய் மிஸ்ராவை பிரதமர் பதவி நீக்கம் செய்யாதது ஏன் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading