ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி வீரர் ஒருவர் கிரிக்கெட் பெண் ஊழியர் ஒருவருடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தது வைரலாகியுள்ளது.
கொரோனா நெருக்கடியைத் தொடர்ந்து சில மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஐபிஎல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆர்சிபி பெங்களூரு அணியும் கொல்கத்தா அணியும் மோதியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் பெங்களூரு அணி 19 ஓவர்களில் 92 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து பத்தே ஓவரில் 94 ரன்கள் சேர்த்து 9 விக்கெட்டில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது.
இப்படியான பரபரப்பான ஆட்டத்திலும் பெங்களூரு அணி வீரர் ஜேமிசன் கிரிக்கெட் போட்டியின் பணியாளரான பெண் ஒருவருடன் சிரித்து பேசிக்கொண்டிருப்பது எதிர்பாராத விதமாக கேமிராவில் பதிவானது. எல்லா வீரர்களும் போட்டியின் போக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் ஜேமிசன் மட்டும் அப்பெண்ணை பார்த்து புன்சிரிப்பு பூத்துக்கொண்டிருந்தார்.
இதை ரசிகர்கள் வைரலாக்கிவிட்டனர். சமூக வலைத்தளம் முழுக்க தற்போது இவர்களின் புகைப்படம்தான் டிரெண்டிங்.
இதை பார்க்கும்போது பிரஞ்சனின்,
“எவ்வளவு
பிரச்னைகளுக்கு மத்தியிலும்
ஒரு பூ
பூக்கதானே செய்கிறது.”
என்கிற கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.