மழலையர் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொற்றா நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். பன்னோக்கு மருத்துவமனையில் 35 கோடி ரூபாய் செலவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் கொண்டுவருவார் எனவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற மாசித் திருவிழா
இந்திய அளவில் 74 இடங்களில் மட்டுமே இதுபோன்ற ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் உள்ளது எனக்கூறிய அவர், வேறு மாநில அரசு மருத்துவமனைகளில் இந்த வசதி இல்லை என குறிப்பிட்டார்.
மேலும், புற்றுநோய் மரணங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும், 2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர்கள் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மழலையர் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.