28.6 C
Chennai
April 25, 2024
இந்தியா செய்திகள்

மின் கசிவால் தேயிலைத்தோட்டத் தொழிலாளர் வீடு எரிந்து நாசம்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள தனியார் எஸ்டேட் தோட்டத் தொழிலாளர் வீட்டில் மின் கசிவு காரணமாக உடைமைகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள தனியார் எஸ்டேட் கடுகுமுடி டிவிஷன்.இங்குள்ள தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் வேலை பார்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தமிழர்கள் வசித்து
வருகின்றனர். நேற்று காலை 11மணி அளவில் பழனிச்சாமி என்பவர் வீட்டில் மின் கசிவு காரணமாக தீ பற்றியது. இதனால் இவர் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.

வீட்டில் தீப்பற்றிய சமயத்தில் பழனிச்சாமியும் அவரது மனைவியும் தேயிலைத் தோட்ட வேலைக்கு சென்றதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சம்பவத்தை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மூணார் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மூணாறு தீயணைப்பு துறை மற்றும் மறையூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தி தீயை அணைத்தனர்.

இது பற்றி மூணாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்
மூணாறு பகுதியில் நூற்றுக்கணக்கான டிவிஷன்கள் உள்ளன. இதில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் போதிய வசதிகள் இன்றி மிகவும் பாழடைந்த வீடுகளில்
அப்பாவி தமிழர்கள் தேயிலைத் தோட்ட வேலைக்காக இங்கு வசித்து வருகின்றனர். இதன்
அருகே தான் சில வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 70-க்கும் மேற்பட்ட தமிழர்கள் நிலச்சரிவில் சிக்கி மாண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

—–ரெ.வீரம்மாதேவி

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading