மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கும் படம், காசேதான் கடவுளடா’. 1972 ஆம் ஆண்டு சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளியான ’காசேதான் கடவுளடா’படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
படத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்திலும், அவர் காதலியாக பிரியா ஆனந்த்தும் நடிக்கிறார்கள். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட மேலும் பலர் இதில் நடிக்கிறார்கள்.
கண்ணன் இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கும் ஆர்.கண்ணன் கூறும்போது, மிகுந்த உற்சாகத்துடன் இதன் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளோம். ஒரே கட்டமாக 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க இருக்கிறோம். கொரோனா பொதுமுடக்க காலத்திற்கு பிறகு தொழில் நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும் ஒன்றாக பணியில் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
இன்னொரு புறம் தமிழின் எவர்கிரீன் கிளாசிக் காமெடி படமாக, மக்களின் மனதில் என்னென்றும் நிற்கும் ’காசேதான் கடவுளடா’ படத்தை அதன் தரம் சற்றும் குறையாமல் ரீமேக் செய்ய வேண்டிய கடமையுணர்வு உள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக, சிரிப்பு மழை பொழியும் படைப்பாக, இது இருக்கும் என்றார்.







