அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா கூறியுள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரை காதக்கிணற்றில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அவர், திமுகவை விட அதிமுக பன்மடங்கு வியூகம் வைத்து தேர்தலை சந்திப்பதாகக் கூறினார். அதிமுகவின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: