29.2 C
Chennai
May 20, 2024
பக்தி செய்திகள்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை மாத உண்டியல் காணிக்கை: ரூ.45 லட்சம் செலுத்திய பக்தர்கள்!

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோயிலில் கார்த்திகை மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ.45,99,214  பணமும், 118 கிராம் தங்கமும், 340 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயிலில் கார்த்திகை மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய பணம், பொன், வெள்ளி ஆகியவற்றை எண்ணும் பணி நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள்:  ‘கேப்டன்’ ஆன ‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’…!

தொடர்ந்து, கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள், கோயில் அறங்காவலர்கள் மற்றும் பூசாரிகள் ஆகியோர் உண்டியலில் வரப்பெற்ற காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காணிக்கை எண்ணும் பணி வளத்தி போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது.  இறுதியில் ரூ.45,99,214 ரொக்கம்,  118 கிராம் தங்கம்,  340 கிராம் வெள்ளி கிடைக்கப்பெற்றுள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading