உடுப்பியில் ரீல்ஸ் எடுக்க அருவிக்கு சென்ற இளைஞர் நிலை தடுமாறி அருவியில்
விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பல்வேறு ஏரிகள், அணைகள் நிரம்பி வழிவதுடன் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகின்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதியை சேர்ந்த சரத்குமார் என்ற
இளைஞர் உடுப்பி மாவட்டம் குந்தாபூர் அருகே உள்ள அரசினகுடி அருவிக்கு
சென்றுள்ளார். அங்கு அருவியில் ஆர்பரித்து கொட்டும் நீரின் முன் பாறையின்
ஓரத்தில் நின்று ரீல்ஸ் எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சரத்குமார் கால்
வழுக்கியதால் நிலைதடுமாறி பாறை விழுந்து ஆர்பரித்து ஓடும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அருவிக்குள் விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
அரசினகுடி மலைப்பகுதி மற்றும் அருவிக்கு சரத்குமார் தனது நண்பர் பரத்வாஜோடு வந்துள்ளார். கடுமையான மழை மற்றும் தண்ணீரின் அளவு ஏரிகளில் நிரம்பி வழிவதால் அப்பகுதியில் மலையேற்றத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினரின் கட்டுப்பாடுகள் விதித்தபோதும் தடையை மீறி 6கிமீ தூரம் இளைஞர்கள் மலையேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் அருவிக்கு முன்னாள் சரத்குமார் எனும் இளைஞர் இதனை அடுத்து சரத்குமாரின் நண்பர் அளித்த தகவலின் அடிப்படையில் கொல்லூர்
வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை தேடி வருகின்றனர்.