கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு அமைச்சரவை சித்தராமையாவிற்கு நிதித்துறை மற்றும் டிகே.சிவகுமாருக்கு நீர் மேலாண்மைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து கடந்த 20 ஆம் தேதி, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. முதலமைச்சராக சித்தராமைய்யாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்றார். மேலும், பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் 24 எம்எல்ஏக்கள், இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று காலை 11:45 மணிக்கு இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த நிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி முதலமைச்சர் சித்தராமையாவிற்கு நிதித்துறை, கேபினட் விவாகாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு நீர் மேலாண்மை மற்றும் பெங்களூர் நகர்ப்புற வளர்ச்சி மேம்பாடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர்கள் பரமேஸ்வராவுக்கு உள்துறை, தினேஷ் குண்டுராவிற்கு சுகாதாரத்துறை, பிரியங் கார்கேவிற்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை , ஜமீர் அகமது கானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வக்பு வாரியத்துறை, மஹாதேவப்பாவிற்கு சமூக நலத்துறை மற்றும் ரஹீம் கானுக்கு நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் ஹஜ் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.