தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களின் துன்பங்களை போக்கவும் கச்சத்தீவை நிரந்தரமாக மீட்டெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் சென்னை விமான நிலையத்தில் 1,200 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து பல்லாரவத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெயில்வே, நெடுஞ்சாலைத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் முக்கியமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் மீனபிடி படகுகள் சிறைப்பிடிக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அதுகுறித்து முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த கோரிக்கையில், கச்சத்தீவை திரும்ப பெறுவது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாத்தலாகும். பாக்-நீரிணை பகுதியிலுள்ள இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வாழும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதரத்திக்காக நேரடியாக மீன்பிடி தொழிலை நம்பியுள்ளனர்.சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் தாண்டிச் செல்லும் நிகழ்வுகளில் இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் தாக்குதலுக்கு வழிவகுக்கும் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை சீர்குலைக்கும்.
எனவே, “கச்சத்தீவை” இந்தியாவிற்கு திரும்பப்பெறுவது மற்றும் பாக்- வளைகுடாபகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது ஆகியவை தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது.
எனவே, மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை மீட்டெடுப்பதன் மூலமே, பாரம்பரியக் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையை மீட்டெடுக்க முடியும் என்பதை தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்துகிறது.