’பொறுத்தார் பூமி ஆள்வார்’: மு.க.ஸ்டாலினை வாழ்த்தி கே.பாக்யராஜ் கடிதம்!

முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்தி இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடனும்,…

முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்தி இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடனும், வாழ்த்துகளுடனும் உங்கள் பாக்யராஜ் எழுதுவது.

பொறுத்தார் பூமி ஆள்வார். ஆளும் பொறுப்பு உங்களைத் தேடி வர அப்பாவின் ஆசி கனிந்துள்ளது. அதை விட தங்களின் தன்னம்பிக்கையும் தளராத உழைப்புமே மிக மிக உன்னதமென என் மனம் நெகிழ்கிறது.

தேர்தல் முடிவு வந்ததுமே சந்தித்து வாழ்த்த நினைத்தேன். ஆனால் எனக்கிருந்த நோயின் அறிகுறி, சளித்தொல்லை காரணமாக தங்களை அசௌகர்யபடுத்த விரும்பாது தவிர்த்தேன்.

தற்போது தொற்று உறுதியானதால் கடிதம் மூலமாகவாவது வாழ்த்துகிறேன். தமிழ் சமுதாயத்தை சீரமைக்கும் சிறப்பான சேவைப் பணியாற்றிய அப்பாவின் எழுத்தாணி யுடன், அன்பு மகனான தாங்கள் அனைத்துத் தமிழ் தாய்மார்களின் சுமை குறைத்து கொரோனா நோயாளிகளின் துயர் துடைக்கும் பொருட்டும் நிறைவான பால் வார்த்துவிட்டீர்கள்

குறைவான விலையில். நெகிழ்வாக இருந்தது. காவல்துறை நண்பர்கள் குறித்தும் கருணையுடன் பரிசீலித்திருக்கிறீர்கள். மகிழ்வு. எனது குடும்பத்தார், பாக்யா குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகிறேன். நிறைவான ஆட்சி அரங்கேறி நாடு நலம் பெற அய்யா வின் அருள் உடனிருக்கும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.