மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. ஆனால், மமதா போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவெந்து அதிகாரி வெற்றிபெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து மமதா கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், அத்துடன் நீதிபதி கௌசிக் சந்தா பாஜகவுடன் தொடர்புடையவராக இருப்பதால் இந்த வழக்கினை வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்து. இதனையடுத்து தற்போது மமதாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி கௌசிக் சந்தா. மமாதாவின் இந்த செயல் நீதிபதியை கேவலப்படுத்தும் திட்டமிட்ட நடவடிக்கை என்று நீதிபதி கௌசிக் தெரிவித்துள்ளார். இந்த அபராதமானது மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஏப்ரலில் நீதிபதி கௌசிக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு மமதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.