ஊடகவியலாளர் ஷண்முகம் மறைவு; நியூஸ் 7 தமிழ் மேலாண் இயக்குனர் நேரில் அஞ்சலி

மறைந்த ஊடகவியலாளர் ஷண்முகத்தின் உடலுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குனர் சுப்ரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக ஷண்முகம் பணியாற்றி…

மறைந்த ஊடகவியலாளர் ஷண்முகத்தின் உடலுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குனர் சுப்ரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக ஷண்முகம் பணியாற்றி வந்தவர் ஷண்முகம். நியூஸ் 7 தமிழின் பேசும் தலைமை, பீனிக்ஸ் மனிதர்கள் போன்ற வெற்றிகரமாக நிகழ்ச்சிகளை கொண்டுவந்தார். தனித்த குரல் வளத்தால் தனக்கென ஊடக உலகில் தனி இடம் பிடித்தவர் ஷண்முகம்.

இந்நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

இவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த ஊடகவியாலாளர் ஷண்முகத்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குனர் சுப்ரமணியன், மறைந்த ஊடகவியலாளர் ஷண்முகம் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவரின் அம்மாவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.