நவீன ஊட்டியின் 200-ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் தொடக்கத்தின்போது, அதை உருவாக்கிய ஆங்கில அதிகாரி ஜான்சல்லிவனை நினைவு கூர்ந்ததற்காக அவருடைய ஐந்தாம் தலைமுறை வாரிசான பேராசிரியர் ஓரியல் சல்லிவன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேராசிரியர் ஓரியல் சல்லிவன் அனுப்பியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில், ஊட்டி உலகத்தின் மிக அழகான இடங்களில் ஒன்றாக உள்ளது எனவும், சுற்றுப்புற உயிரினங்களுக்கான மாபெரும் இடமாக உள்ளது எனவும், மொழி முக்கியத்துவம் பெற்ற இடமாக திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மலை வாழ் உறைவிடமாக மேம்படுத்துவதில் எங்கள் மூதாதையர்கள் முக்கியப் பங்காற்றினார்கள் என்று அறிவது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பெரிய மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘ஊரகப்பகுதிகளை மேம்படுத்த ரூ.3000 கோடி; தமிழ்நாடு அரசு’
நவீன ஊட்டியின் 200-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் தொடக்க விழா உரையில், ஜான் சல்லிவனின் சிறந்த செயல்களை நினைவு கூர்ந்த தங்களின் கனிவான செயலுக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ள அவர், இது தக்களின் பெருந்தன்மையை காட்டுவதாக தெரிவித்துள்ளார். இத்தகைய கவுரவத்தை அவர், எந்த மக்களுடன் வாழ்ந்தாரோ அந்த மக்களால் வழங்கப்படுவது மிகவும் சிறப்புக்குரியதாக கருதுவதாகவும், தங்களுக்கும், தங்களுடைய தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையுடன் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பேராசிரியர் ஓரியல் சல்லிவன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
உதகமண்டலம், அரசு தாவரவியல் பூங்கா சாலை, முக்கோண சந்திப்பில், ஜான் சல்லிவன் சிலையை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள நிலையில், அவர் இந்த கடிதத்தை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.