ரயிலில் தீ பரவியதாக வெளியான தகவலை உண்மை என நம்பிய பயணிகள் சிலர் உயிர் தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் குமண்டி ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையில், குமாண் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த சாஸாராம் ராஞ்சி இண்டர்சிட்டி அதிவிரைவு ரயிலில் நேற்று (ஜூன் 14) இரவு 8 மணியளவில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்பட்டது. திடீரென தீப்பிடித்ததாக வதந்தி பரப்பிய நிலையில், இதை கேட்டு உண்மை என நம்பி, அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள் சிலர் உயிர் தப்புவதற்காக ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்தனர்.








