நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் அமர்வு ஜனவரி 31- ஆம் தேதி முதல் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் இரண்டாம் அமர்வு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 -ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்