இந்தியாவில் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றும், யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரம் மேட்டுத் தெருவில் உள்ள விநாயகர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம், சிவராத்திரி குறித்த ஆசிரியர் கி.வீரமணியின் கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கருத்து பரிமாற்றங்களை சுட்டி காட்டுவதை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை,
இது இந்தியா, இங்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றும், சிவ ராத்திரி
நிகழ்ச்சி கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் ஒப்புதல் படி சிறப்பாக நடத்தி
முடிக்கப்பட்டுள்ளது எனவும், அரசியல் ஈடுபாடு இன்றி கட்டணம் எதுவும்
வசூலிக்காமல் சிறப்பாக நடத்தி முடிக்கபட்டதாக தெரிவித்தார்.
மேலும் தற்போது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த கோயிலை முழுமையாக தரிசனம் செய்து
இந்த கோவிலின் உயர்வுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, பக்தர்களுக்கு என்ன செய்ய
வேண்டும் என்றெல்லாம் நாங்கள் ஆய்வு செய்தோம் என்று தெரிவித்த அவர்,
திமுக இந்துக்களை ஆதரிக்கிறது என்பதற்காக தான் சிவ ராத்திரி கொண்டாடபட்டதா
என்ற கேள்விக்கு, திமுக எம்மதமும் சம்மதம் என்று ஒரு இணைப்போடு இருக்கக் கூடிய கட்சி, எங்களுக்கு ஆத்திகரும் வாக்களித்திருக்கிறார்கள், நாத்திகர்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.