ஆண்கள் உடன் இருப்பதாலேயே பெண் மேயர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்பது தவறான கருத்து என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனையில் புதிய
CEMONC என்கிற குழந்தைகளுக்கான அவசர பிரிவை அமைச்சர் மா.சுப்ரமணியம் திறந்து
வைத்தார்.பிஅதோடு திரவ நிலை மருத்துவ பிராணவாயு கொள்கலன் மற்றும் பச்சிளம்
குழந்தைகள் நல வாழ்வு மையத்தையும் திறந்தார் வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இதுவரை 1000க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா மருத்துவ
சிகிச்சையை RSRM மருத்துவமனையில் வழங்கி உள்ளனர். இந்த சேவைகளை மேம்படுத்தும் விதமாக ஏகம் அறகட்டளை, HCL FOUNDATION நிதி உதவிவுடன் ரூபாய் 53 லட்சம் மதிப்பில் கொரோனா தொற்று ஏற்பட்ட கர்ப்பிணி அறக்கட்டளையின் நிதி தாய்மார்களுக்கு பயன்பெறும் வகையில் மருத்துவ உபகரணங்கள், பிசியோதெரபி சிகிச்சை, தாய்ப்பால் குறித்த ஆலோசனை மையத்தை அமைச்சர் மா.சுப்ரமணியம் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆண்கள் உடன் செல்வதாலேயே மேயர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றில்லை. பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கும் கட்சி திமுக. எனது செய்தியாளர்கள் சந்திப்பில் கூட மேயர் மிக நன்றாக பதிலளித்தார். தமிழக அரசைப் பொருத்தவரை
மாணவர்கள் மிக விரைவாக வீட்டிற்கு அழைத்து வரும் பணியில் சிறப்பு குழு
ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நேற்று மத்திய அமைச்சரை சந்தித்த பின்னர் திருச்சி சிவாவும் உக்ரைனில்
இருந்து வந்த மாணவர்கள் மருத்துவம் படிப்பது, பயிற்சி பெறுவது குறித்த
கோரிக்கையையும் வைத்ததாக செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். நவீன்
பட்நாயக் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதற்கு முன்பே திமுக இது குறித்த
கோரிக்கை வைத்துள்ளது எனக் கூறினார்.
மருத்துவர் பெமினாவின் குற்றச்சாட்டு பற்றிய கேள்விகளை எழுப்பிய போது,
கன்னியாகுமரியை சேர்ந்த மருத்துவர் பெமினா விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்
கொண்டேன் அந்த விசாரணையின் போது அவர் மருத்துவ அதிகாரியாக ஜோடியை குறிப்பிட்டு இருக்கக்கூடிய செயலில் கடந்த அவர் பணிமாற்றம் செய்து நான்கு ஆண்டுகள்
ஆகிவிட்டது ஆனால் அதை நேற்று நடந்தது போல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது என்பது மிகவும் தவறான செய்தி. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தொடர் பணி செய்வதால் மருத்துவர்கள் மன உளைச்சலில் இருப்பது உண்மைதான் ஆனால் ஊடகத்தில் ஒரு செய்தியை ஆராய்ந்து உண்மை என அறிந்த பின்னரே செய்தியை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். மருத்துவர்கள் பணியிட மாற்றம் என்பது அலுவலக ரீதியாக நடைபெறக்கூடிய ஒருநடவடிக்கையே தவிர்த்து மற்ற எதுவும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவும்.