32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி உயிரிழப்பு…

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுன்களுக்கு குரல் கொடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவின் தென்துருவத்தை அடைவதற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்டது சந்திரயான் 3 விண்கலம். ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயானின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவின் மேற்பரப்பை தொட்டது. இதன் அடிப்படையில் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டிருக்கும் விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்துருவப் பகுதியின் மேற்பரப்பில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தன.

அந்த வகையில் இஸ்ரோவில் ராக்கெட் ஏவப்படும் போது வர்ணனை செய்யும் பெண் குரலுக்கும் தனி ரசிகர்கள் உண்டு. அந்த குரலுக்கு சொந்தக்காரர் விஞ்ஞானி வளர்மதி.  கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய உந்துகணை நிகழ்வுகளின் போது வளர்மதி வர்ணனையாளராக பணியாற்றியுள்ளார். 50 வயதாகிய வளர்மதியின் குரலுக்கு பிரபல விஞ்ஞானிகளும் ரசிகர்களாக உள்ளனர். இத்தகைய குரலுக்கு சொந்தக்காரரான விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (04.09.2023) உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு விஞ்ஞானிகள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

முதலமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை- 12 மணி நேரத்தில் பேருந்து சேவை

Web Editor

பிப்ரவரி வரை கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – ராதாகிருஷ்ணன்

G SaravanaKumar

எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நிறைவு! மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 6 முதலமைச்சர்கள் பங்கேற்பு!

Web Editor