ஸ்பெயினில் வரலாறு காணாத மழை; குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்…

ஸ்பெயினில் வரலாறு காணாத மழைப்பொழிவால் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. ஸ்பெயின் தலைநகர் MADRID-ல் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர்நிலைகளிலும் சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள…

ஸ்பெயினில் வரலாறு காணாத மழைப்பொழிவால் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

ஸ்பெயின் தலைநகர் MADRID-ல் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர்நிலைகளிலும் சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

MADRID நகருக்கு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால், பொதுமக்கள் வீட்டை விட்டுவெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், MADRID நகருக்குச் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கையால் Alcanar, Tarragona உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.