சந்திராயன் – 3 விண்கலம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 06.04 மணிக்கு நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவுக்கு செல்லும் ‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டாரப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது
பூமியைச் சுற்றிவந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஆக. 1-ஆம் தேதி புவியீர்ப்பு விசையிலிருந்து சந்திரயான்-3 விலக்கப்பட்டு நிலவை நோக்கிச் செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது.
நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக் கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டா் கலன் கடந்த 17ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.
இந்நிலையில் இஸ்ரோ தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்திரயான் 3 விண்கலம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 06.04 மணிக்கு நிலவில் இறக்கப்படும் என அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதன் நேரலைக்காட்சிகளை ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் தொலைக்காட்சியில் காண்பதற்கான லிங்குகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
https://twitter.com/isro/status/1693181653273940240
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டதாவது, “சந்திராயன் – 3 வரும் ஆகஸ்ட் 23, 2023 அன்று சுமார் 18:04 மணி அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது . வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!
எங்களுடன் சேர்ந்து நிலவில் சந்திராயன் – 3 தரையிரங்குவதை காண ஆகஸ்ட் 23, 2023 அன்று கீழ்காணும் தளங்களில் இணையுங்கள்.
இஸ்ரோ இணையதளம் isro.gov.in
YouTube youtube.com/watch?v=DLA_64
Facebook facebook.com/ISRO
மற்றும் டிடி நேஷனல் டிவி 17:27 மணி முதல்.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.







