கன்னியாகுமரி சேர்ந்த இரும்பு மனிதன் கண்ணன், ஸ்பெயினில் நடைபெறும் 2023 ஆம் ஆண்டிற்கான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டிக்கு இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளதை அடுத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 13,14,15 தேதிகளில் ஸ்பெயினில் நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்து போட்டியில் கலந்து கொள்ள கண்ணன் தேர்வாகி உள்ள நிலையில், நாகர்கோவில் அருகேயுள்ள மணக்குடி பாலத்தில் 210 கிலோ எடை கொண்ட கிரைன் டயரை 30 மீட்டர் வரை புரட்டி போட்டு பயிற்சியில் ஈடுபட்டார்.







