சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி இங்கிலாந்து கடந்த 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்று விளையாடின. இதில் இந்திய அணியினர் 3 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 18 பதக்கங்கள குவித்துள்ளனர்.
கிருஷ்ணா நாகா் (ஆடவா் ஒற்றையா்), பிரமோத் பகத்/சுகந்த் கடம் இணை (ஆடவா் இரட்டையா்), மானசி ஜோஷி/துளசிமதி முருகேசன் (மகளிா் இரட்டையா்) ஆகியோா் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.
பிரமோத் பகத் (ஆடவா் ஒற்றையா்), நித்யஸ்ரீ (மகளிா் ஒற்றையா்), மனோஜ் சா்காா்/தீப் ரஞ்சன் பிசோயீ (ஆடவா் இரட்டையா்), சிராக் பரேதா/ராஜ் குமாா் (ஆடவா் இரட்டையா்), பிரமோத்/மனீஷா ராம்தாஸ் ஜோடி (கலப்பு இரட்டையா்) ஆகியோா் வெள்ளிப் பதக்கம் பெற்றனா்.
இதேபோல் நிதேஷ்குமார், சுகந்த் கடம், மானசி ஜோஷி மன்தீப் கௌா் உள்ளிட்ட வீரர்கள் 10 வெண்கல பதக்கங்களை வென்றனர்.







