தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றிவரும் ஜேக்கப் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்தி முடித்த பின்னரே, தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி எம்.எஸ்.ராமேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இன்று நடைபெறவிருந்த தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மனுவுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை வருகிற 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.







