ஆளுநர் நீட் மசாதோவை திருப்பிய அனுப்பிய நிலையில் இன்று கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என் ரவி , தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள நிலையில் இன்று கடுமையான அமளி ஏற்பட்டது. மாநில அரசு நிறைவேற்றிய நீட் மசோதாவை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என்ற கேள்வியை திமுக எம்பிக்கள் முன் வைத்தனர். ஆனால் இது சம்பந்தமாக விவாதத்திற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி மறுத்தார். நேரம் ஒதுக்கப்படாததை எதிர்த்து திமுக எம்பிக்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் திமுக எம்பி வில்சன் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றக் கோரி தனி நபர் மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார். “ மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு நேரடியாக நடத்தும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை மட்டும் மத்திய அரசுப் பட்டியலில் வைக்க வேண்டும் எனப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்