மும்பை தாராவியில், 50,000 மேற்பட்டோர் பயனடையும் வகையில் இரண்டடுக்கு கொண்ட சமூக கழிப்பிடத்தை மத்திய அமைச்சர் ஆதித்யா தாக்கரே திறந்துவைத்தார்.
ஆசியாவில் அதிகப்படியான குடிசை குடியிருப்புகள் இருக்கும் பகுதியாக தாராவி இருந்துவருகிறது. இங்கு சரியான கழிப்பறை வசதி, போதுமான இடம், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் இப்பகுதியில் இருக்கும் மக்கள் அவதிபட்டுவருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சுவிதா கேந்திரா திட்டத்தின் கீழ் மும்பை தாராவியில் இரண்டு அடுக்கு தளத்துடன் மிகப்பெரிய கழிவறையை பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் கட்டிமுடித்துள்ளது.மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே இதனை நேற்று திறந்துவைத்தார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் “இந்தியாவின் மிகப்பெரிய சமூக கழிவறையை கட்டிமுடித்துள்ளோம். இந்த இடத்தில் 111 கழிவறைகள் உள்ளன. தாராவியில் இருக்கும் 50,000 பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த கழிவறை கட்டடம் அமைந்துள்ளது. மேலும் இந்த கட்டடத்தில் குளியலறை, துணிகளை சலவை செய்யும் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளன.
இங்கு வாழும் பொதுமக்களின் நலனை பேனும் வகையில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவே நாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இந்த திட்டத்தால் தாராவியின் பெரும்பாலான பொதுமக்கள் பயன்பெறுவர்” என்று தெரிவித்துள்ளார்.
ஆசியாவில் அதிகப்படியான மக்கள் தொகைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த சமூக கழிப்பிட கட்டத்தால் அதிகப்படியான சாமானியர்கள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.