தமிழ்நாடு வளர்கிறது, தமிழ்நாடு வளரும்போது இந்தியா வளரும்.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம், சென்னை-கோவை இடயே வந்தே பாரத் ரயில் மற்றும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பல்லாவரம் புறப்பட்டார்.
அங்கு அல்ஸ்தோம் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமர் நரேந்தி மோடி பங்கேற்று சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனை கட்டிட திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி அடிக்கல் நாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாவது..
” எப்போது தமிழ்நாட்டிற்கு வந்தாலும் பெருமை அடைகிறேன். வரலாறு, பாரம்பரியத்தின் இருப்பிடம் தமிழ்நாடு. தேசபக்தி, தேச உணர்வின் மையமும் தமிழ்நாடுதான். தமிழ்ப் புத்தாண்டு பிறக்கவுள்ளது. புதிய ஆற்றல், புதிய தொடக்கத்திற்கான நேரம் இது. வேறு பணிகளுக்கான திட்டங்களும் தொடங்கப்படவுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் கட்டமைப்புத்துறையில் புரட்சியை இந்தியா சந்தித்து வருகிறது. கட்டமைப்பில் முதலீட்டிற்காக ரூ 10 இலட்சம் கோடியை ஒதுக்கியிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2014 ஐ ஒப்பிடும்போது இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.
2014 இல் விமானங்களின் எண்ணிக்கை 74, அது தற்போது 150 ஆகியுள்ளது. தமிழ்நாட்டின் நீண்ட கடற்கரையோரம் வணிகத்திற்கு முக்கியமானது. 660 மருத்துவக்கல்லூரிகள் உள்ளது. 9 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 3 மடங்காகியுள்ளது.
சாதனைகளை சாத்தியமாக்கியது பணித்திறன், தொலைநோக்குப் பார்வைதான். கட்டமைப்புத் திட்டங்கள் என்றாலே தாமதம் என்ற நிலை இருந்தது. அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்ற நிலையில் விரைவாக்கியுள்ளோம்..
கட்டமைப்பு என்பதை காங்கிரீட் கலவை, செங்கல், சிமெண்ட் என்பதாக பார்க்கவில்லை. மனிதத்துடன் அணுகுகிறோம். விருதுநகர் – தென்காசி பருத்தி விவசாயிகளை மற்ற ஊர்களுடன் இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வருவாய்க்கான வாய்ப்புகளையும், முதலீட்டையும் அவை தருகின்றன. சாலை என்பது வெறுமனே சாலை அல்ல. சாலையில், இரயில் பாதையில் செல்லும்போது மக்களின் கனவுகளும் வேகமெடுக்கின்றது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் முதன்மையான ஒன்று. இதுவரை காணாத ஒதுக்கீடாக ரூ 6,000 கோடிக்கும் அதிகமாக இரயில்வே துறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2004-2014 இல் தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகள் சுமார் 800 கிமீ. அதன் பின்னர் 2014-2023 இடைப்பட்ட காலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் 2,000 கிமீ ஆக அதிகரித்துள்ளது கடந்த சில ஆண்டுகளில் பல முக்கியத் திட்டங்களை தமிழ்நாடு பெற்றுள்ளது.
தமிழ்நாடு வளரும்போது இந்தியா வளரும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்கும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் என்பது பெருமையானது. வ உ சிதம்பரம் பிள்ளையின் நிலத்தில் இது இயல்பான ஒன்று. கோவை தொழில்களின் ஆற்றல் பீடமாக அமைந்துள்ளது. எனவே சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் திட்டம் வளர்ச்சியை கொண்டு வரும். தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகர் மதுரை. தமிழ்நாடு வளர்கிறது, தமிழ்நாடு வளரும்போது இந்தியா வளரும்.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.