ஆப்பிளின் மிகப்பெரிய சந்தையாக மாறும் இந்தியா… உற்பத்தியை 5 மடங்காக அதிகரிக்க திட்டம்

வரும் நாட்களில், சீனாவைத் தவிர, ஆப்பிளின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறக்கூடும். ஆப்பிள் தயாரிப்புகளுக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் தேவை உள்ளது. சீனாவை அடுத்து, ஆப்பிளின் பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளது. இருப்பினும்,…

வரும் நாட்களில், சீனாவைத் தவிர, ஆப்பிளின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறக்கூடும்.

ஆப்பிள் தயாரிப்புகளுக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் தேவை உள்ளது. சீனாவை அடுத்து, ஆப்பிளின் பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளது. இருப்பினும், வரும் நாட்களில், சீனாவைத் தவிர, ஆப்பிளின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறக்கூடும்.

மேலும், கடந்த சில ஆண்டுகளில் ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் சீனாவின் கவலை அதிகரிக்கலாம். மேலும், இந்தியாவில் உற்பத்தியை ஐந்து மடங்காக அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் (2023-24) இந்தியாவில் தனது உற்பத்தியை 4,000 கோடி டாலராக (சுமார் ரூ.3.33 லட்சம் கோடி) அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டைவிட 5 மடங்குக்கும் மேல் அதிகமாகும் என்று அரசு வட்டாரங்கள் கூறின.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.