இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து நாட்களாக தொற்று ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் கேரளாவில்தான் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், ஒரே நாளில் 12,830 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 14,667 பேர் மருத்துவமனையில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். இதுவரை 3,36,55,842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். இப்போது 1,59,272 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 446 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,58,186 ஆக உள்ளது.
நாடு முழுவதும் 1,06,14,40,335 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.