2047-ம் ஆண்டு அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக இருக்கும் வகையில் இந்தியா வல்லரசாகும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கதில் உள்ள தனியார் கல்லூரியில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்கை வரலாற்றினை ஒன்றிணைத்து ‘ஓலம்’ என்ற காணொளியை கட்சியை
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தென்னிந்திய ஆய்வு படிப்பு மையம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஓலம்’ காணொலியை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த உலகத்திற்கு ஒரு தலை சிறந்த நாடக இந்தியா இருந்து இருக்கிறது. இந்த 8 ஆண்டுகளில் இந்த நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று நாம் பார்த்து வருகிறோம் என்ற அவர், வா.உ.சி சிதம்பரனார் கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிகொண்டு இருக்கிறார்.
அனைவரும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும், தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு காணிக்கை செலுத்தும் வகையில் வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார், அதனை நாம் பின்பற்ற வேண்டும் என எல்.முருகன் கேட்டுக் கொண்டார்.
இளைஞர் மத்தியில் அக்னி பாத் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. பல லட்சம் இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அக்னி பாத் திட்டத்திற்கு பதிவு செய்து வருகிறார்கள் என கூறிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அப்துல் கலாம் கண்ட கனவு படி , 2047 ஆம் ஆண்டு அணைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக இருக்கும் வகையில் இந்தியா வல்லரசாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்