உலக நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாக உள்ளது- ஜெர்மனி

இந்தியாவில் பல சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது என்று ஜெர்மனியின் வெளியுறவுத்தறை அமைச்சர் அன்னாலெனா தெரிவித்துள்ளார். ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பேற்ற பின், இந்தியாவிற்கு வருகை…

இந்தியாவில் பல சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது என்று ஜெர்மனியின் வெளியுறவுத்தறை அமைச்சர் அன்னாலெனா தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பேற்ற பின், இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் கடைசி மாதங்களில் நான் இந்தியாவிற்கு வந்திருகிறேன். ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்ற சில நாட்களில் இந்த பயணம் அமையவிருந்தது.

இந்த பயணத்தின் போது தற்போதைய சூழலில் அவசர கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களான காலநிலை நெருக்கடி மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும்.

வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும் உள்ள இந்தியா பலவிதமான சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலகின் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகவும், பாலமாகவும் உள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும். 21 ஆம் நூற்றாண்டில் இந்தோ-பசிபிக் மற்றும் சர்வதேச ஒழுங்கை வடிவமைப்பதில் இந்தியா தீர்க்கமான ஆதிக்கம் செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா ஜெர்மனியின் கூட்டணி நாடாக உள்ளது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.