28.9 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

200 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை-யுனிசெஃப் அமைப்பு வாழ்த்து

200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சமீபத்தில் சாதனை படைத்தது. இதனை பிரதமர் மோடி பெருமிதத்துடன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், யுனிசெஃப் என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இந்திய அரசை பாராட்டியுள்ளது.

இதுகுறித்து இந்தியாவுக்கான யுனிசெப் பிரதிநிதி யசுமசா கிமுரா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மிகப் பெரிய நாடான இந்தியாவில் 18 மாதங்களில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது மிகப் பெரிய சாதனையாகும்.

முழுமையாக தொற்று பரவல் முடிவுக்கு வராத நிலையிலும், கடினமான நிலப்பரப்பு மற்றும் அடைய முடியாத பகுதிகள், மாறிவரும் பருவநிலை காலங்கள் போன்ற பல சவால்கள் இந்தியாவில் உள்ளன. எனினும் இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரிக்க அயராது உழைத்த இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களின் அற்புதமான சாதனை மற்றும் அர்ப்பணிப்புக்கு இது சான்றாகும்.

தடுப்பூசிகள் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்த விஞ்ஞானிகள், சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், திரைப்பட நடிகர்கள் ஆகியோரின் கடின உழைப்பைக் கௌரவிக்கும் தருணம் இது. துல்லியமான திட்டமிடலில், தகுதியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி, இந்தியா இந்த மைல்கல்லை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

கொரோனா தொற்று தொடங்கிய சமயத்தில் இருந்து இந்தியாவுக்கு யுனிசெப் அமைப்பு ஆதரவளித்து வருகிறது. ஃப்ரீசர்கள், டீப் ஃப்ரீசர்கள், ரிஃப்ரிஜிரேட்டர்கள் உள்பட பல உபகரணங்களை வழங்கி இருக்கிறோம்.

கோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும், இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை மேலும் துரிதப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்காகவும் தேசிய தகவல் தொடர்பு பிரசாரங்களில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு யுனிசெஃப் தொடர்ந்து ஆதரவளிக்கிறது.

எங்களின் ஆதரவு இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி பிரசாரங்களை முன்னெடுக்கு உதவியது. தேவையில்லாத கட்டுக்கதைகள், தவறான செய்திகள் ஆகியவற்றை தடுத்து சரியான தகவல்கள் மக்களிடம் சென்று சேர பல்வேறு நடவடிக்கைகளை யுனிசெஃப் எடுத்தது என்று அந்த அறிக்கையில் யசுமசா கிமுரா குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading