சென்னையில் தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகர் உட்பட 6 தனியார்…

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகர் உட்பட 6 தனியார் ஹோட்டல்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேர்வு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வேலைவாய்ப்பு முகாமில் வெடிகுண்டு வெடிக்க போவதாக அந்த தனியார் ஹோட்டலின் இமெயிலுக்கு குறுந்தகவல் ஒன்று இன்று காலை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தனியார் ஹோட்டல் நிர்வாகம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இணைய வழியாக புகார் அளித்துள்ளது.

புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இமெயில் வந்த ஐடியை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இன்னும் 3 நாட்களில் சுதந்திர தினம் வர உள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.