முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிப்பு; பஞ்சாப் மாநில அரசு

முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சோனியின் பாதுகாப்பை திரும்பப் பெற்றதை…

முக்கிய பிரமுகர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சோனியின் பாதுகாப்பை திரும்பப் பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு பஞ்சாப் அரசு பதில் அளித்துள்ளது. இதற்கு முன்பு, பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, 400 முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பைக் குறைத்தது. இதில் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ் வாலாவும் ஒருவர். இந்நிலையில் மே 29-ம் தேதி அவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அண்மைச் செய்தி: ‘நவீன தமிழ்நாட்டின் தந்தை’

கொலை தொடர்பான, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏன் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று பஞ்சாப் ஆம் ஆத்மியை நோக்கி கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த பஞ்சாப் மாநில அரசு, ‘அமிர்தரஸ் பொற்கோவிலில் 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன் நினைவு தினம் ஜூன் 6-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. அந்நிகழ்வுக்கு காவல் வழங்கவே முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பைக் குறைத்ததாகவும், அது தற்காலிகமானது எனவும் தெரிவித்தது. மேலும், ஜூன் 7 முதல் மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்’ என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.