பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பாண்டங்களையும் இணைத்து வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த முல்லைவாடி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் விழாவையொட்டி தற்போது மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. செம்மண் தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு செம்மண் விலை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், மண்பாண்ட உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் உற்பத்தியாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு மின்சக்கரம் உள்ளிட்டவை வழங்க வேண்டும் எனவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண்பாண்டங்களையும் இணைத்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.