சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் ஹூனான் மாகாண தலைநகர் சாங்ஷாவில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்கள் வழக்கம்போல சென்றுக்கொண்டிருந்தன. எப்போதும் பரபரப்புடன், நெரிசல் மிகுந்து காணப்படும் இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியது.
இந்த விபத்தில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது. சாலையில் வாகனம் நெரிசல் காணப்பட்டதால் வாகனங்களில் இருந்து வெளியேற முடியாமல் தீயில் கருகியும், சிலர் உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்த கோர விபத்தில் கார், லாரிகள் உள்பட 49க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ச்சியாக மோதியுள்ளது. தொடர்ச்சியாக மோதியதால் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி புகை மண்டலாக காட்சியளித்தது.







