தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகத்தை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், வரும் அக்டோபா் முதல் அந்த வளாகத்தில் படிப்புகள் தொடங்கப்படும் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 23 இடங்களில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அண்மையில் தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்ஐஆர்எப் அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. இந்த பட்டியலில், சென்னை ஐஐடி முதல் இடம் பிடித்து உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் சென்னை ஐஐடியின் புதிய கிளையை தொடங்க உள்ளதாக சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி அறிவித்தார். சென்னை ஐஐடியின் கிளை அயல்நாட்டில் தொடங்க இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
‘தெற்கு உலகுக்கான இந்தியாவின் பொறுப்புணா்வை பிரதிபலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை’ என்று இந்தியாவின் இந்த முயற்சியை தான்சானியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விவரித்துள்ளாா்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“வளா்ந்து வரும் சா்வதேச தேவைகளுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்திக்கொள்வதற்கு உதவியாக, உலகத் தரத்திலான உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக தான்சானியாவின் ஜான்ஜிபாரில் சென்னை ஐஐடி-யின் வளாகத்தைத் தொடங்க, அந்த நாட்டுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜான்ஜிபாா் சிட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் அதிபா் ஹுசைன் அலி வைனி, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலையில் இந்திய கல்வி அமைச்சகம், சென்னை ஐஐடி மற்றும் ஜான்ஜிபாா் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சகம் ஆகியோரிடையே இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
இது வெளிநாட்டில் அமையும் முதல் ஐஐடி வளாகமாகும். இது இரு நாடுகளிடையேயான நீண்ட கால நட்புறவை பிரதிபலிக்கும் வகையிலும் திகழும். உயா் தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இந்திய பல்கலைக்கழகங்கள், வெளிநாடுகளில் வளாகங்களைத் தொடங்க ஊக்குவிக்கப்படும் என்று தேசிய கல்விக் கொள்கை 2020-இல் பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜான்ஜிபாரில் அமைக்கப்படும் சென்னை ஐஐடி வளாகத்தில் வரும் அக்டோபா் முதல் படிப்புகள் தொடங்கப்படும். மாணவா் சோ்க்கை, பாடத் திட்டம் உள்ளிட்ட நடைமுறைகளை சென்னை ஐஐடி மேற்கொள்ளும். மூலதனம் மற்றும் செலவினங்களை ஜான்ஜிபாா் அரசு ஏற்றுக்கொள்ளும். இந்த வளாகத்தில் கலப்புத் துறை சாா்ந்த படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும். இதில் சேர இந்திய மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். இங்கு படிப்பை நிறைவு செய்யும் மாணவா்களுக்கு சென்னை ஐஐடி-யின் பட்டச் சான்றிதழ் வழங்கப்படும்”
இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.